» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!

செவ்வாய் 24, ஜூன் 2025 10:58:49 AM (IST)

திருச்செந்தூர் அருகே ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் முத்து கிருஷ்ணன் (15), அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் தலைமை ஆசிரியர் சக்தி ஞானசுந்தரி என்பவர் பிரம்பால் அடித்தாராம். இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனது பெற்றோரிடம் தலைமை ஆசிரியை தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார். 

இதனால் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு வந்து என்ன என்று விசாரிக்கிறோம் என்று கூறினார்களாம். இந்த நிலையில் நேற்று 8 எட்டு மணியளவில் முத்துக் கிருஷ்ணன் வீட்டின் படுக்கைறயைில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து

90s kidJun 24, 2025 - 11:24:04 AM | Posted IP 172.7*****

Ada paavi

80 kids ஒருவன்Jun 24, 2025 - 11:04:32 AM | Posted IP 172.7*****

நானே நிறைய பிரம்பு அடி வாங்கிட்டு அமைதியாக இருக்கேன், இன்றைய சில 2k கிடஸ் ஐ கண்டால் பயங்கரமாக இருக்கே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory