» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் தொடர் கஞ்சா வேட்டையில் காவல்துறை: 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது!
திங்கள் 26, மே 2025 10:04:06 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகே கஞ்சா வழக்கில் 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். பள்ளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ராகுல்(20) மற்றும் ஆனந்த் என்பவரின் மகன் வளன்மேஸ்லினோ (19), நாகர்கோயில் பகுதியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை என்பவரின் கணேஷ் ராஜா (19), வடசேரி பகுதியை சேர்ந்த முத்து குமார் என்பவரின் மகன் ஆறுமுகம் (24),கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேஸ்வர் (22) மற்றும் விஜயன் என்பவரின் மகன் சூரிய (22) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
செவ்வாய் 24, ஜூன் 2025 5:28:10 PM (IST)

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

வழக்கில் தேடப்பட்டவர் குளத்தில் குதித்தார்: படகில் சென்று கைது செய்த போலீசார்!!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:56:09 AM (IST)
