» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டாறு கம்பளம் பகுதியில் மதுரையை சேர்ந்த செல்வராஜ் (30), சாட்டை அடித்துக் கொண்டு தர்மம் எடுத்து வந்தார். இவர் நேற்று மாலை குடிபோதையில் வடிவீஸ்வரம் நீராளி கரை குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
குளிக்க சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. குளத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் குளத்தில் கிடந்தவரை பிணமாக மீட்டனர். இவருக்கு சாந்தி (28) என்ற மனைவியும் 5 வயது, மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!
சனி 17, மே 2025 4:06:54 PM (IST)

குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 17, மே 2025 11:01:27 AM (IST)

கொத்தனார் மர்ம மரணம்: 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி கள்ளக்காதலனுடன் கைது!
சனி 17, மே 2025 10:58:37 AM (IST)

திருநெல்வேலி ஷாலிமார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க விஜய் வசந்த் எம்பி கோரிக்கை
சனி 17, மே 2025 10:28:32 AM (IST)

அ.தி.மு.க, பேரூராட்சி தலைவியின் வெற்றி செல்லாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!
வெள்ளி 16, மே 2025 5:39:36 PM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 16, மே 2025 4:53:42 PM (IST)
