» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டாறு கம்பளம் பகுதியில் மதுரையை சேர்ந்த செல்வராஜ் (30), சாட்டை அடித்துக் கொண்டு தர்மம் எடுத்து வந்தார். இவர் நேற்று மாலை குடிபோதையில் வடிவீஸ்வரம் நீராளி கரை குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
குளிக்க சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. குளத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் குளத்தில் கிடந்தவரை பிணமாக மீட்டனர். இவருக்கு சாந்தி (28) என்ற மனைவியும் 5 வயது, மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
