» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 17, மே 2025 11:01:27 AM (IST)
குமரியில் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியரின் காரில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தனியார் நிறுவன ஊழியர் அழகிய நம்பி (56). சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காரில் வந்தனர். திருமணத்தில் பங்கேற்ற பின் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். திரிவேணி சங்கமம் கடற்கரை காந்தி மண்டபம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றனர். திரும்பி வந்த போது காரில் இருந்த கைப்பையை காணவில்லை.
அதில் 15 பவுன் நகைகள், ரூ.26 ஆயிரம் இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரமாகும். அழகிய நம்பி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார், பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அழகிய நம்பி அவசரத்தில் கார் கதவை லாக் செய்யாமல் சென்றதை கவனித்து மர்மநபர்கள் கைப்பையை திருடியது தெரிந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
