» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

குமரி மாவட்டத்தில் 18-வயது குறைவான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டிய 20 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி மற்றும் சர்ச் ரோடு பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயது குறைவான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களிடத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)
