» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லை சோதனை சாவடிகளில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சில் நெய்யாற்றின்கரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் வைத்திருந்த துணி பைகளை சோதனை செய்த போது அதில் தலா 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பரிமல் மண்டல், பஞ்சனன் மண்டல் என்பதும், சாமியார் வேடத்தில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி கேரளாவில் யாருக்கு சப்ளை செய்ய திட்டமிட்டனர் என்பது தொடர்பாக 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)
