» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)
நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லை சோதனை சாவடிகளில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சில் நெய்யாற்றின்கரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் வைத்திருந்த துணி பைகளை சோதனை செய்த போது அதில் தலா 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பரிமல் மண்டல், பஞ்சனன் மண்டல் என்பதும், சாமியார் வேடத்தில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி கேரளாவில் யாருக்கு சப்ளை செய்ய திட்டமிட்டனர் என்பது தொடர்பாக 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)
