» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள்: உணவகத்துக்கு சீல்
புதன் 23, ஏப்ரல் 2025 8:30:41 AM (IST)
மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகத்தில், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் என்பவா், மாா்த்தாண்டம் சந்தை சாலையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிடச் சென்றாா். உணவில் இறந்தநிலையில் கரப்பான்பூச்சி காணப்பட்டதாம். இதுகுறித்து அவா் கேட்டபோது, உணவக நிா்வாகத்தினா் உரிய பதில் கூறவில்லையாம்.
இதுதொடா்பாக அவா் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா். ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலானோா் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவகத்துக்கு சீல் வைத்து, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
