» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள்: உணவகத்துக்கு சீல்
புதன் 23, ஏப்ரல் 2025 8:30:41 AM (IST)
மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகத்தில், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அந்த உணவகத்துக்கு சீல் வைத்தனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஜித் என்பவா், மாா்த்தாண்டம் சந்தை சாலையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிடச் சென்றாா். உணவில் இறந்தநிலையில் கரப்பான்பூச்சி காணப்பட்டதாம். இதுகுறித்து அவா் கேட்டபோது, உணவக நிா்வாகத்தினா் உரிய பதில் கூறவில்லையாம்.
இதுதொடா்பாக அவா் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா். ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலானோா் உணவகத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவகத்துக்கு சீல் வைத்து, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)
