» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறார்கள் ஓட்டி வந்த 19 பைக்குகள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
சனி 29, மார்ச் 2025 12:33:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது, வடசேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் 19 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக "JUVENILE DRIVING CASE" under section 199A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் கோப்புக்கு எடுக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ 25000 அபராதம், மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை, ஒரு வருடம் வாகன பதிவு ரத்து, சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை போன்ற தண்டைனைகள் விதிக்கப்படும். ஆகவே, பள்ளி விடுமுறை காலங்கள் வர உள்ள நிலையில், சிறார்கள் வாகனங்கள் இயக்காதவாறு பெற்றோர்கள் கவனமாக செயல்படுமாறு நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
