» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்
செவ்வாய் 25, மார்ச் 2025 4:41:51 PM (IST)

குமரி மாவட்டம் கோவளம் பகுதியில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) திருநெல்வேலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பொது உபயோக மையத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (25.03.2025) திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) திருநெல்வேலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பொது உபயோக மையத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை துவக்கி வைத்து சிறப்பித்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிட்கோ மூலமாக கோணம் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் தொழிற்பேட்டை மையம் இயக்கி வருகிறது.
கோணம் தொழிற்பேட்டை 20.07 ஏக்கர் பரப்பளவில் 29 தொழில்மனைகளும் 18 தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட்டு அனைத்தும் தொழிற்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்பேட்டையில் மீன்வலை தயாரிக்கும் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இங்கு மீன்வலை தயாரித்தல், ஸ்டீல் பேப்ரிகேசன், கையுறைகள் தயாரித்தல், பேப்ரிகேசன் ஓர்க் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மார்த்தாண்டம் தொழிற்பேட்டை 7.50 ஏக்கர் பரப்பளவில் 8 தொழில்மனைகளும் 10 தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட்டு அனைத்தும் தொழிற்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்பேட்டையில் முந்திரி சார்பான தொழில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்கு மீன்வலை தயாரித்தல், முந்திரி பதப்படுத்துதல், அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி, பேப்ரிகேசன் ஓர்க் போன்றவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கபட்ட பெண்கள் பலஉணவு தயாரிக்கும் கூடம் ரூ.6.5 கோடி மதிப்பு ஆகும்.இவற்றில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.5.98 கோடி சிறப்பு நோக்க ஊர்தி பங்களிப்பு மற்றும் வங்கிக்கடன் ரு.66.50 இலட்சம் மகளிர் உணவு பல்பொருள் குழுமத்திற்கு முதற்கட்டமாக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இக்குழுமத்தில் 29 சிறப்பு நோக்க ஊர்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுமம் முற்றிலும் பெண்களால் செயல்படுத்தப்படவுள்ளது.
இக்குழுமம் மூலம் நெல்லிக்காய், ஆரஞ்ச், தக்காளி, எலுமிச்சை, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றிலிருந்து பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட்களும் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக முருங்கையை அடிப்படையாக கொண்டு பல உபபொருட்கள், தேன் நெல்லிக்காய், எலுமிச்சை ஊறுகாய், மாம்பழ ஊறுகாய், முந்திரி பிஸ்கெட், தினை கலவை, உலர் மீன், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், இறால் பொடி, மூலிகை பொடிகள், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை பொடி, லட்டுவகைள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயார் செய்வதற்காக 60 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தயாரிப்பு பொருட்களை வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு விரிவுப்படுத்தி, சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிட்கோ கண்காணிப்பாளர் மாரியம்மாள், ஸ்டெல்லாமேரி சமுதாய கல்வி மேம்பாட்டு இயக்குநர் அருட்சகோதரி லிஸ்டர் அர்ச்சனா, உதவி இயக்குநர் அருட்சகோதரி லிஸ்டர் ஜின்சி, இல்லத்தலைவி அருட்சகோதரி லிஸ்டர் லீமா, டி.எம் சபை தலைவி அருட்சகோதரி ரோஸ் பிரான்சிஸ், துணைத்தலைவி அருட்சகோதரி லிஸ்டர் சோபி தெரேஸ், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
