» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது!
திங்கள் 24, மார்ச் 2025 8:27:28 PM (IST)
இரணியல் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பியவரை விமான நிலையத்தில் போலீசார் மடக்கினர்
குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி கிணற்றடி விளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (39), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது ெதாடர்பாக தனுஷ் மீது இரணியல் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து இந்திய குடியுரிமை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று இரவு தனுஷ், விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அவரை பிடித்த குடியுரிமை துறையினர், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் திருவனந்தபுரம் சென்று தனுசை கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு பிறகு தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
