» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செல்போனில் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி மாணவி சாவு
திங்கள் 24, மார்ச் 2025 8:42:02 AM (IST)
செல்போனில் ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகுந்தன். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு அனிதா (வயது 14), எழில்மதி (7) ஆகிய 2 மகள்கள் உண்டு. அனிதா அங்குள்ள அரசு உயர்நிலை நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தாய் விஜயா மற்றும் மகள் எழில்மதி ஆகிய இருவரும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று இருந்தனர்.
வீட்டில் தனியாக இருந்த அனிதா பொதுத்தேர்வுக்கு படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் அனிதா வீட்டிலிருந்த செல்போனை எடுத்து ‘சார்ஜ்' போடுவதற்காக ஈரமான கையால் ஸ்விட்சை அழுத்தியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அலறியபடி அனிதா மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது அனிதா சுயநினைவு இல்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தாய் விஜயாவுக்கு உடனடியாக செல்போன் மூலம் தகவல் அளித்தனர். பின்னர், அனிதாவை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு மாணவி அனிதாவின் பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் செல்போனுக்கு ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)
