» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் ? விசாரணை தொடக்கம்
சனி 13, ஜூலை 2024 12:33:53 PM (IST)
நாகர்கோவிலில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே குழு விசாரணை நடத்தி வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக அசாம் மாநிலம் திப்ரூகருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாராந்திர ரயிலாக இருந்த இந்த ரயில் நேற்று முன்தினம் முதல் தினசரி ரயிலாக மாற்றப்பட்டது. இந்த ரயில் தினமும் மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். இதே போல திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவு 9.55 மணிக்கு வந்து சேரும்.
இந்த நிலையில் தினசரி ரயிலாக மாற்றப்பட்ட முதல் நாளிலேயே நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்ட போது ஒரு பெட்டியில் உள்ள 2 சக்கரங்கள் தடம்புரண்டன. தண்டவாளத்தை விட்டு 2 சக்கரங்களும் வெளியே வந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டி மீண்டும் தண்டவாளத்தில் இழுந்து நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து குழு அமைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடச்சியாக நடந்துள்ளன. கடந்த 4-9-2023 அன்று நாகர்கோவில்- தாம்பரம் ரயிலும், 5-12-2021 அன்று சரக்கு ரயிலும் தடம்புரண்டது.
மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நாகர்கோவில்- கோவை ரயிலும், கடந்த 2017-ம் ஆண்டு நாகர்கோவில்- சென்னை ரயிலும், அதற்கு முன்பு கன்னியாகுமரி- ஹவுரா ரயிலும் தடம்புரண்டது. திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தான் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், எனவே போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)
