» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேராயரிடம் ஆசிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்!!

வியாழன் 28, மார்ச் 2024 5:46:48 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயரிடம் குமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் ஆசி பெற்றார். 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயர் ஏ.ஆர். செல்லையா-வைமரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றார். 

பால்வளத் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகர திமுக செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory