» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவில் குளத்தில் மூழ்கி தையல் கடைக்காரர் பலி : பறக்கையில் சோகம்

வியாழன் 25, ஏப்ரல் 2024 3:37:07 PM (IST)

பறக்கை  மதுசூதன பெருமாள் கோவில் தெப்பக் குளத்தில் மூழ்கி தையல் கடைக்காரர் உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை கீழத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32), தையல் கடைக்காரர். இவருடைய மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராமச்சந்திரன் தினமும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் தெப்பக் குளத்தில்குளிப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு இவர் குளத்தில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். 

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரன் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory