» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை!
வியாழன் 28, மார்ச் 2024 4:23:51 PM (IST)
நித்திரவிளை அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் திருமணமான 11 மாதத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அஸ்வதி (26) கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் மாலை உறவினர் ஒருவரின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக இருவரும் சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சரத் படுக்க செல்கிறேன் என கூறிவிட்டு தனியாக சென்று அறை கதவை பூட்டிவிட்டு படுத்து உள்ளார். சந்தேகம் அடைந்த அசுவதி இரவு 9 மணி அளவில் கதவின் இடைவெளி வழியாக பார்த்த போது, சரத் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
உடனேஉறவினர்கள் உடனே உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து சரத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். பின்னர் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரத் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக அஸ்வதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.