» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் மோடி குறித்து பேசினால் கொன்று விடுவோம்: பாலஜனாதிபதிக்கு மிரட்டல்!

சனி 23, மார்ச் 2024 12:19:59 PM (IST)

பிரதமர் மோடி குறித்து பேசினால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக பால ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டர் குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தாக சாமிதோப்பு தலைமைப்பதி குருவும், நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவருமான பால ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும் அவர், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சில கருத்துகளை தெரிவித்தார். இந்தநிலையில் பால ஜனாதிபதிக்கு தபால் மூலமாக போலி முகவரியில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், பிரதமர் மோடி குறித்து பேசினால் கொன்று விடுவோம் என இருந்ததாக பால ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory