» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹோலி பண்டிகை: நாகர்கோவில்-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சனி 23, மார்ச் 2024 12:00:32 PM (IST)

ஹோலி பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண்: 06011 தாம்பரம்-நாகர்கோவில் 25-ந்தேதியும், ரயில் எண்: 06012 நாகர்கோவில்-தாம்பரம் 24-ந்தேதி மற்றும் 31-ந்தேதியும் ரயில் எண்: 06019 நாகர்கோவில்-சென்னை சென்டிரல் ரயில் நிலையம், 24-ந்தேதியும், ரயில் எண்: 06020 சென்னை சென்டிரல்-நாகர்கோவில் 25-ந்தேதியும், ரயில் எண்: 06067 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 28-ந்தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 16382 கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும். நாளை ரயில் எண்: 06777 எர்ணாகுளம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 06778 கொல்லம்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory