» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

புதன் 20, மார்ச் 2024 5:56:32 PM (IST)



குமரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிய அலுவலக வளாக கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (20.03.2024) துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில் "கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் அனுப்பி வைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், உதவி தேர்தல் அலுவலர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி, தமிழரசி, சுப்பையா, கனகராஜ், லொரைட்டா, சுப்புலெட்சுமி, சேக் அப்துல் காதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன், தனி வட்டாட்டாசியர் (தேர்தல்), வினோத், வட்டாட்சியர்கள் கோலப்பன் (தோவாளை), அனில்குமார் (அகஸ்தீஸ்வரம்). புரந்தரதாஸ் (திருவட்டார்), முருகன் (கல்குளம்), ராஜசேகர் (கிள்ளியூர்), துணை வட்டாட்சியர் (தேர்தல்) மணிகண்டன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory