» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் இருந்து மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்கள் : ஆட்சியர் அனுப்பி வைத்தார்!

வியாழன் 7, டிசம்பர் 2023 10:12:33 AM (IST)



மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அனுப்பி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில் மாநகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய உணவு பொருட்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வாகனம் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அனுப்பி வைத்து வைத்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்: கடந்த சனிக்கிழமை சென்னை வானிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவித்தப்படி மிக்ஜாம் புயலின் காரணமாக தமிழ்நாட்டுக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் உதவும் வகையில் உடனடியாக மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களான தண்ணீர், பிஸ்கெட், பால் பவுடர் மற்றும் பிரட் ஆகியவற்றினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து நாளையும் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள், நல்உள்ளங்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் உதவிட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சங்கரநாராயணன், புஹாரி (நிலம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாசியர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory