» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய உணவக உரிமையாளர் மீது விசாரணை: ஆட்சியர் பேட்டி!
வெள்ளி 27, ஜனவரி 2023 4:27:20 PM (IST)

கன்னியாகுமரியில் என்.சி.சி. முகாமில் காலை உணவு சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளை ஆட்சியர் நேரில் சந்தித்து பேசினார்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் பணி தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களால் இன்று கன்னியாகுமரியில் மேற்கொள்ளப்பட்டது இதில் 150 மாணவ மாணவிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்பணியில், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, புனித அந்தோணியார் பள்ளிகளை சார்ந்த தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்கள் கடற்கரை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்கள். காலை உணவின் ஒவ்வாமை காரணமாக 13 மாணவ, மாணவியர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதை இன்று நேரில் பார்வையிட்டதோடு, அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. தற்போது மாணவ, மாணவியர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கிய உணவக உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.
ஆய்வின்போது, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி இராஜகுமாரி, கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், விஜயலெட்சுமி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் விஜயன், வழக்கறிஞர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)

ஆண்டJan 28, 2023 - 12:23:01 PM | Posted IP 37.12*****