» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)
இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசியை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. "நிமிஷா பிரியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட அரசு முயல்கிறது.
இதற்காக இந்திய அதிகாரிகள், உள்ளூர் சிறை அதிகாரிகள், வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பில் உள்ளனர். இது மரண தண்டனை ஒத்திவைக்கப்படுவதை சாத்தியமாக்கி உள்ளது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷரியா என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் குருதிப் பணம் என்பது ஒரு வகையான நீதியாக கருதப்படுகிறது. எனவே, பிரியா குடும்பத்தினர் சார்பில் உயிரிழந்த மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்வந்தனர். அதை மெஹ்தி குடும்பத்தினர் ஏற்றார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவரை அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் : டிரம்ப் ஆவேசம்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:38:45 PM (IST)
