» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)
ஆந்திர மாநிலம் நகரி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் தாயைக் கொலை செய்த சிமெண்ட் வியாபாரி, பின்னர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நாராயணவனம் மண்டலம் வெங்கடகிருஷ்ணா பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (45). இவர் சிமெண்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஹரிதா (33) அழகு நிலையம் நடத்தி வந்தார். இவர்களுக்குக் கௌசிக் (14) என்ற மகனும், ஹரிணி (12) என்ற மகளும் இருந்தனர். மோகன் தனது தாய் சந்திரகலாவுடன் (65) ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மோகனின் மைத்துனர் பாலகிருஷ்ணா வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அக்காள் ஹரிதாவும், தாய் சந்திரகலாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மோகனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மாயமான மோகன் மற்றும் அவரது இரு குழந்தைகள் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மோகன் தனது தாய் மற்றும் மனைவியைக் கொன்றுவிட்டு, குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நஷ்டம் காரணமா அல்லது குடும்பத் தகராறா? இந்த விபரீத முடிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: ராகுல் காந்திக்கு எதிராகப் பரபரப்பு பேனர்கள்!
திங்கள் 8, ஜூன் 2026 11:36:10 AM (IST)

ரூ.6,000 சம்பளத்திலிருந்து கோடிக் கணக்கில் சொத்து குவிப்பு: விசாரணையில் சிக்கிய அரசுப் பொறியாளர்!
திங்கள் 8, ஜூன் 2026 10:46:58 AM (IST)


