» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தின் மேல் பகுதியில் கடலோர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சபரிமலை சன்னிதானத்தின் கொடிமரத்திற்கு மிக அருகில், நேற்று பகல் நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சுமார் 30 வினாடிகள் வட்டமிட்டுள்ளது. கருவறைக்கு மிக அருகில் தாழ்வாகப் பறந்த அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர், கோவிலின் காட்சிகளைத் தனது கேமராவில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. சபரிமலை வரலாற்றில் இவ்வளவு தாழ்வாக ஹெலிகாப்டர் பறப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சம்பவம் பாதுகாப்பு விதிமீறலாகக் கருதப்படுவதால், இது குறித்து விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன், சபரிமலை பாதுகாப்புப் பொறுப்பாளரான ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித்திடம் இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடலோர காவல் படை விளக்கம்: பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து கடலோர காவல் படை (Coast Guard) அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: "சிஜி821 (CG821) என்ற அந்த ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, வானிலை திடீரென மோசமடைந்து மேகமூட்டமாகக் காணப்பட்டது. இதனால் திசைமாறிய ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாகச் சபரிமலைப் பகுதிக்குச் சென்றது. வானிலை சீரானதும் உடனடியாகத் தளம் திரும்பியது."
பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: இருப்பினும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் வழிபாட்டுத் தலம் மீது இவ்வளவு தாழ்வாகப் பறந்தது ஏன் என்பது குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சன்னிதானத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் கேரளாவில் விவாதப் பொருளாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: ராகுல் காந்திக்கு எதிராகப் பரபரப்பு பேனர்கள்!
திங்கள் 8, ஜூன் 2026 11:36:10 AM (IST)

ரூ.6,000 சம்பளத்திலிருந்து கோடிக் கணக்கில் சொத்து குவிப்பு: விசாரணையில் சிக்கிய அரசுப் பொறியாளர்!
திங்கள் 8, ஜூன் 2026 10:46:58 AM (IST)


