» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த மின் உற்பத்தி நிலையத்தில், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ராட்சத பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தால் ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்தது. உயிருக்கு அஞ்சி தொழிலாளர்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த கோர விபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறை, தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பாய்லர் வெடித்ததற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது அழுத்த மாறுபாடு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலை நிர்வாகத்தின் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டம்: தயாரிப்பு செலவை குறைக்க அதிரடி நடவடிக்கை!
சனி 30, மே 2026 11:09:24 AM (IST)

மராட்டியத்தில் விஷச் சாராயம் குடித்த 14 பேர் பரிதாப பலி - 5 பேர் கவலைக்கிடம்: 8 பேர் கைது!
சனி 30, மே 2026 8:57:44 AM (IST)

கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடாததால் சர்ச்சை: ஆளுநர் அதிருப்தி!
வெள்ளி 29, மே 2026 3:46:47 PM (IST)

சவுதியில் மரண தண்டனையில் இருந்து மீண்ட அப்துல் ரஹீமுக்கு கேரள மக்கள் வரவேற்பு!
வெள்ளி 29, மே 2026 12:42:56 PM (IST)

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பதவிக்கு கோவை மூத்த வழக்கறிஞர் மோகனா பரிந்துரை!
வியாழன் 28, மே 2026 5:00:02 PM (IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா அறிவிப்பு: டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பு!
வியாழன் 28, மே 2026 12:44:09 PM (IST)


