» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு: மம்தா பானர்ஜி வாழ்த்து!

வியாழன் 12, மார்ச் 2026 5:17:05 PM (IST)



மேற்கு வங்க மாநிலத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று (வியாழக்கிழமை) முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற எளிமையான விழாவில், கல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) பிமன் பானர்ஜி, கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கிம், இடதுசாரி முன்னணித் தலைவர் பிமன் போஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

அதேசமயம், பாஜக தரப்பிலிருந்து தலைவர்கள் யாரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக ரீதியாகத் தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கடந்த மார்ச் 5-ம் தேதி, மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி அங்கு நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி, இதற்கு முன்னதாக நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழக ஆளுநர் பொறுப்பு மாற்றம்: 2021-ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என். ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. தற்போது அவர் மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory