» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:14:44 PM (IST)

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. வழக்கமான ரோந்துப் பணியில் இருந்த போலீசார் தீ விபத்தைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை ஏழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிபத்து குறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமிதா மிஸ்ரா இது குறித்துத் தெரிவிக்கையில், "விபத்தின் போது மொத்தம் 9 பேர் உள்ளே சிக்கியிருந்தனர். மீதமுள்ள இரண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி அரசு அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்து போகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:45:56 PM (IST)

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு முருகன் படம் வழங்கி வாழ்த்து பெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:19:20 PM (IST)

வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கி மாறும் வசதி : ரிசர்வ் வங்கி பரிசீலனை!
புதன் 1, ஏப்ரல் 2026 12:53:12 PM (IST)

சர்வதேசப் போர் பதற்றம்: பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
புதன் 1, ஏப்ரல் 2026 12:23:41 PM (IST)

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு : தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

பீகார் கோவில் திருவிழாவில் பெரும் சோகம்: கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:24:20 PM (IST)

