» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழித்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியுதவியை தடுத்தல், முறையான மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது.
இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக பொதுமக்கள் சந்தித்த துயரங்கள் ஏராளம். மணிகணக்கில் ஏ.டி.எம்.எந்திரங்களின் முன்பும், வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசையில் காத்து நின்ற சோகச்சுவடு நடைபெற்று இன்றுடன் (சனிக்கிழமை) 9 ஆண்டுகள் ஆகிறது.
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்னும் சிலர் கைவசம் வைத்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதை பார்க்கமுடிகிறது. வீடுகளில் எப்போதோ சேமிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்ட பணம், காலாவதியான பிறகு கத்தை, கத்தையாக கண்டுபிடிக்கப்படுகிறது. இதை மாற்றி தங்களுடைய அவசர தேவைக்காக பயன்படுத்தமுடியாமல் திணறி வருகின்றனர். ஒரு சிலர் அவற்றை காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மாற்ற முடியாமல் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்களுக்கு இது ஆறுதல் கொடுத்தது. இதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தகவல் தவறானது. ரிசர்வ் வங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் பணம் தொடர்பான அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது” என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு மசாஜ் மையத்தில் கனடா பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியர் கைது!
புதன் 11, பிப்ரவரி 2026 12:21:43 PM (IST)

வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது: தங்க நகைகள், கார் பறிமுதல்!!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:43:30 PM (IST)

ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:30:31 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயார்: முதல்வருக்கு அஸ்வினி வைஷ்ணவ்பதில்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:07:41 PM (IST)

நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:25:11 AM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

