» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரூர் துயர சம்பவம்: விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:25:52 AM (IST)

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சனிக்கிழமையன்று உடனடியாக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய விஜய், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கிட்டத்தட்ட 34 மணி நேரத்திற்கு பிறகே இன்று காலை விஜய் தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் விஜய் தனது காரில் புறப்பட்டுள்ளார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

