» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: இந்தியா வருமாறு அழைப்பு
சனி 9, ஆகஸ்ட் 2025 12:07:03 PM (IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதை, ரஷ்யா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதிபடுத்தினார். இந்நிலையில், அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து, மோடியிடம் புடின் விளக்கினார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய தலைவர்கள், அதை இன்னும் வலுப்படுத்த உறுதிபூண்டனர். இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'என் நண்பர் புடினுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
'இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்தாண்டு, இந்தியா வரும் அதிபர் புடினை வரவேற்க ஆர்வமாக உள்ளேன்' என, தெரிவித்து உள்ளார்.
பிரேசில் அதிபர்
இந்தியாவுக்கு விதித்தது போலவே தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அரசு அமல் செய்திருக்கிறது. இந்த சூழலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)


.gif)