» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மோசடி : ராகுல் குற்றச்சாட்டு!

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 5:42:05 PM (IST)



தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர் "கர்நாடகாவில் 16 இடங்களை வெல்வோம் என்று எங்கள் உள் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் நாங்கள் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம். 

இந்த மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம். ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. போலி வாக்காளர்கள், போலி மற்றும் செல்லாத முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. 

ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது. அரியானா, மத்தியப் பிரதேசத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றைச் சொல்கின்றன. பின்னர் திடீரென்று முடிவு முற்றிலும் மாறுபட்ட திசையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது. எனவே, கருத்துக் கணிப்புகள் நமக்கு ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன. திடீரென்று முடிவு எதிர் திசையில் செல்வதை காண்கிறோம்" என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

srinivasanAug 8, 2025 - 04:31:08 PM | Posted IP 162.1*****

Be indian By indian. this man is CROSS..

srinivasanAug 8, 2025 - 04:30:42 PM | Posted IP 162.1*****

lusu punda..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory