» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மோசடி : ராகுல் குற்றச்சாட்டு!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 5:42:05 PM (IST)

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர் "கர்நாடகாவில் 16 இடங்களை வெல்வோம் என்று எங்கள் உள் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் நாங்கள் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம்.
இந்த மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம். ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. போலி வாக்காளர்கள், போலி மற்றும் செல்லாத முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது.
ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது. அரியானா, மத்தியப் பிரதேசத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றைச் சொல்கின்றன. பின்னர் திடீரென்று முடிவு முற்றிலும் மாறுபட்ட திசையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது. எனவே, கருத்துக் கணிப்புகள் நமக்கு ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன. திடீரென்று முடிவு எதிர் திசையில் செல்வதை காண்கிறோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)

srinivasanAug 8, 2025 - 04:31:08 PM | Posted IP 162.1*****