» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புனேவில் சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி... பெற்றோர் மீது வழக்குப்பதிவு!
சனி 13, ஜூலை 2024 4:11:00 PM (IST)

புனேவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மராட்டிய அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன் விளக்கையும் பயன்படுத்தி வந்தார். மேலும் கூடுதல் கலெக்டர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் அறையை பூஜா ஆக்கிரமித்து கொண்ட தாகவும் புகார் எழுந்தது. இவர் மீதான புகார்களை தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவாசே கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓ.பி.சி. இடஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க ஒருநபர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பூஜா கேத்கர் அளித்த ஆவணங்களையும், தேர்வு பெற்ற பிறகு அளித்த ஆவணங்களையும் அக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் பூஜா கேத்கர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தன.
இந்நிலையில், பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் கையில் துப்பாக்கியுடன் உள்ளூர் விவசாயிகளை மிரட்டும் புகைப்படைங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து பாட் போலீசார் பூஜாவின் பெற்றோர் திலீப் கேத்கர்-மனோரமா கேத்கர் மீது விவசாயிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)
