» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பது சனநாயகப்படுகொலை! - சீமான் கண்டனம்
வியாழன் 2, டிசம்பர் 2021 5:21:26 PM (IST)
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பது சனநாயகப்படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை : பாராளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடைவிதித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றும்போதும், அவற்றைத் திருத்தம் செய்யும்போதும் அதனை எவ்வித விவாதங்களுக்கும், தர்க்கங்களுக்கும் உட்படுத்தாது, மாற்றுக்கருத்துக்கே இடமுமளிக்காத வகையில் கொடுங்கோல் சட்டங்களை அவசர அவசரமாக இயற்றி வரும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது.இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மை நடவடிக்கைகளையும், சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் அதிகார வல்லாண்மையையும், ஒற்றைமயத்தை நிலைநிறுத்தி, மக்களுக்கான ஆட்சி அதிகாரக்கட்டமைப்பு முறைகளை அவர்களுக்கெதிராகவே மாற்றும்வகையில் அடுக்கடுக்காக இயற்றப்படும் பல்வேறு சட்டங்களையும் எதிர்த்துக் குரலெழுப்பா வண்ணம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கி, அவர்களது குரல்வளையை நெரிப்பது மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும். இது அரும்பாடுபட்டு இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, நூற்றாண்டுகாலம் போராடிப் பெற்றுத் தந்த விடுதலை எனும் மகத்துவமானக் கோட்பாட்டைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தலைமை செயலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட முயற்சி : சென்னையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 12:26:41 PM (IST)

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: சிவகாசி அருகே சோகம்!
சனி 27, டிசம்பர் 2025 12:00:34 PM (IST)

மார்கழியில் மக்களிசை: பறை இசைத்து கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்!
சனி 27, டிசம்பர் 2025 10:58:05 AM (IST)

இரட்டை பசுமாடு சின்னம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் : தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
சனி 27, டிசம்பர் 2025 10:14:28 AM (IST)

வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை: கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
சனி 27, டிசம்பர் 2025 10:08:56 AM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)



.gif)
THAMBIRAJDec 3, 2021 - 03:29:45 PM | Posted IP 108.1*****