» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதுகில் குத்தினார்கள்; 9 ஆண்டு காலம் காத்திருந்தேன்: இபிஎஸ் மீது சசிகலா கடும் தாக்கு
புதன் 25, பிப்ரவரி 2026 4:43:18 PM (IST)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து வி.கே.சசிகலா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: "அம்மாவுடன் (ஜெயலலிதா) கூடவே இருந்து நல்லது, கெட்டது அனைத்தையும் பார்த்தவள் நான். 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்து வரத் தயாராக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால், வெளியே இருப்பவர்கள் விதவிதமாகக் கதைகளைக் கட்டினார்கள். நானே அவரைக் கொன்றுவிட்டதாகக் கூடப் பேசினார்கள்."
"நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனை தீர்ப்பு வந்த மறுநாளே நான் பெங்களூரு சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து, இப்போது பதவியில் இருக்கிறாரே இவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன். இன்று அவரது பெயரைக் கூடச் சொல்ல நான் விரும்பவில்லை. பெயர் சொல்லும் அளவிற்கு அவர் நல்லவர் கிடையாது."
"எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத போது பரோல் கேட்டோம். பெங்களூரு சிறை நிர்வாகம் உடனடியாக 15 நாட்கள் அனுமதி அளித்தது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து அனுமதி வரவேண்டும் என அவர்கள் கூறினர். நான் யாரை அந்தப் பதவியில் உட்கார வைத்துவிட்டுப் போனேனோ, அவரே எனக்கு அனுமதி அளிக்கவில்லை எனச் சென்னையிலிருந்து பதில் வந்தது."
"எடப்பாடி பழனிசாமி தன்னை மாற்றிக்கொள்வார் என்று கடந்த 9 ஆண்டு காலமாகப் பொறுமையாகக் காத்திருந்தேன். ஆனால், போதுமான அளவு எனது முதுகில் குத்திவிட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அம்மாவின் பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றார். தனது உரையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை இறுதிவரை குறிப்பிடாமல் வி.கே.சசிகலா கடுமையாகச் சாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்தது தனியார் பால் விலை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
புதன் 25, பிப்ரவரி 2026 5:16:51 PM (IST)

நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை: முதல்வர் இரங்கல்
புதன் 25, பிப்ரவரி 2026 4:11:46 PM (IST)

முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார்
புதன் 25, பிப்ரவரி 2026 3:12:05 PM (IST)

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் : ஸ்டாலின் உறுதி
புதன் 25, பிப்ரவரி 2026 3:11:07 PM (IST)

நான் என்ன தவறு செய்தேன்? அரசியலை விட்டு விலகத் தயார்! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்
புதன் 25, பிப்ரவரி 2026 10:18:51 AM (IST)

நல்லகண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்
புதன் 25, பிப்ரவரி 2026 10:13:52 AM (IST)

