» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் என்ன தவறு செய்தேன்? அரசியலை விட்டு விலகத் தயார்! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

புதன் 25, பிப்ரவரி 2026 10:18:51 AM (IST)

அதிமுக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகியும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தன்னை அரசியலில் தனிமைப்படுத்துவதாகக் கூறி போடியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, போடியில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ், செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்:

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு முதலமைச்சர் ஆகும் விருப்பமே இல்லை. என்னை வற்புறுத்தித்தான் அந்தப் பதவியில் அமர வைத்தார்கள். ஆனால், அதன் பிறகு பல்வேறு வழிகளில் என்னை அவமானப்படுத்தி பதவியிலிருந்து வெளியேற்றினார்கள். நான் திமுக-வுக்கு வாழ்த்து தெரிவித்ததை வைத்து, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தவறான பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். நாகரிகம் கருதியே நான் வாழ்த்து சொன்னேன்."

டிடிவி தினகரன் தன்னை 'பசுந்தோல் போர்த்திய புலி' என்று விமர்சித்தது குறித்துப் பேசிய அவர்:    "அரசியல் நாகரிகம் கருதி நான் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. நான் நினைத்தால் அவரை விட மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும். அரசியலில் என்னை இந்த அளவுக்குத் தனிமைப்படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்தேன்? அந்த உண்மையைச் சொன்னால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். நான் என்ன இப்போது சங்கர மடத்துக்கா செல்ல முடியும்?" என விரக்தியுடன் கேள்வி எழுப்பினார்.

"திமுக பலமான கூட்டணியை அமைத்துள்ளது. அவர்களை வீழ்த்த வேண்டுமானால் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு." வரும் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிடுவேனா என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஆனால், நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்." எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவில் வகுத்த சட்ட விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரும் வரை, கட்சி விதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவேன்." இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory