» சினிமா » செய்திகள்

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு: உறுதிபடுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்!

சனி 19, ஜூலை 2025 5:09:16 PM (IST)



குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி படுத்தியுள்ளார். 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தின் இயக்குநர்களாக கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித்துடன் மீண்டும் இணைகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு ஆதிக், "ஆம். நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தைவிட வித்தியாசமான படமாக இது இருக்கும். படக்குழு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory