» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேடையில் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: இடும்பாவனம் கார்த்திக் பரபரப்பு விளக்கம்!

வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:57:20 AM (IST)

NanjilSampathNarkali.jpg

பொதுமேடையில் நாஞ்சில் சம்பத் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் மேடையை நோக்கி நாற்காலியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சான்றாண்மைப் பாசறை மற்றும் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் நேரில் பார்த்தவற்றை விரிவாக விளக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜ் பாண்டே, நாஞ்சில் சம்பத்தைச் "சொல்லின் செல்வர்", "நாவுக்கரசர்" என அறிமுகப்படுத்திப் பேச அழைத்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் பேசத் தொடங்கியதும், அங்கிருந்த சிலர் "இன்னோவா சம்பத்" என்பது உள்ளிட்ட சில விமர்சனங்களை முன்வைத்துப் கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நாஞ்சில் சம்பத், பெண்கள் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த அந்தப் பொதுமேடையில் அவையில் பயன்படுத்தக் கூடாத மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியுள்ளார்.

முதலில் அவர் என்ன பேசினார் என்பது சரியாகக் கேட்கவில்லை என்றாலும், அவர் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதை உறுதி செய்த பிறகு, கோவை சத்யன், ராஜீவ் காந்தி மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் ரங்கராஜ் பாண்டேவிடம் சென்று நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அதற்குள் கூட்டத்தில் இருந்தவர்கள் கடும் ஆவேசமடைந்து மேடையை நோக்கி முன்னேறி வந்தனர். அதில் சிலர் மேடையை நோக்கி நாற்காலியைத் தூக்கி வீசியதால் அங்குப் பெரும் கலவர சூழல் உருவானது.

இச்சம்பவம் குறித்து யூடியூப் வீடியோவில் பேசிய இடும்பாவனம் கார்த்திக்: "நாஞ்சில் சம்பத் மிகுந்த முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் பொது மேடையில் அத்தகைய ஆபாசமான சொற்களை உச்சரித்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அங்குச் சூழல் மோசமடைந்து நாஞ்சில் சம்பத் தாக்கப்படும் அபாயகரமான நிலை ஏற்பட்டபோது, நானும் ராஜீவ் காந்தியும் குறுக்கிட்டுத் தடுத்து அவரைப் பாதுகாத்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory