» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேடையில் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: இடும்பாவனம் கார்த்திக் பரபரப்பு விளக்கம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:57:20 AM (IST)

பொதுமேடையில் நாஞ்சில் சம்பத் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் மேடையை நோக்கி நாற்காலியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சான்றாண்மைப் பாசறை மற்றும் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் நேரில் பார்த்தவற்றை விரிவாக விளக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜ் பாண்டே, நாஞ்சில் சம்பத்தைச் "சொல்லின் செல்வர்", "நாவுக்கரசர்" என அறிமுகப்படுத்திப் பேச அழைத்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் பேசத் தொடங்கியதும், அங்கிருந்த சிலர் "இன்னோவா சம்பத்" என்பது உள்ளிட்ட சில விமர்சனங்களை முன்வைத்துப் கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நாஞ்சில் சம்பத், பெண்கள் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த அந்தப் பொதுமேடையில் அவையில் பயன்படுத்தக் கூடாத மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியுள்ளார்.
முதலில் அவர் என்ன பேசினார் என்பது சரியாகக் கேட்கவில்லை என்றாலும், அவர் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதை உறுதி செய்த பிறகு, கோவை சத்யன், ராஜீவ் காந்தி மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் ரங்கராஜ் பாண்டேவிடம் சென்று நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அதற்குள் கூட்டத்தில் இருந்தவர்கள் கடும் ஆவேசமடைந்து மேடையை நோக்கி முன்னேறி வந்தனர். அதில் சிலர் மேடையை நோக்கி நாற்காலியைத் தூக்கி வீசியதால் அங்குப் பெரும் கலவர சூழல் உருவானது.
இச்சம்பவம் குறித்து யூடியூப் வீடியோவில் பேசிய இடும்பாவனம் கார்த்திக்: "நாஞ்சில் சம்பத் மிகுந்த முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் பொது மேடையில் அத்தகைய ஆபாசமான சொற்களை உச்சரித்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அங்குச் சூழல் மோசமடைந்து நாஞ்சில் சம்பத் தாக்கப்படும் அபாயகரமான நிலை ஏற்பட்டபோது, நானும் ராஜீவ் காந்தியும் குறுக்கிட்டுத் தடுத்து அவரைப் பாதுகாத்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:36:28 PM (IST)

திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 12:23:23 PM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

சட்டசபையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது - உதயநிதி குற்றச்சாட்டு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:02:20 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


