» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து வாட்ஸ்-அப்பில் பகிர்வு : இளைஞர் கைது!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:21:55 AM (IST)
இளம்பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும் அவரது தந்தையையும் மிரட்டிய இளைஞரை ஆறுமுகனேரி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (25). இவர் 25 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச்செயலைப் பற்றி அறிந்த அந்தப் பெண்ணும் அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது ரிச்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

காமநாயக்கன்பட்டியில் பரலோக மாதா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 9:31:05 AM (IST)

தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் : சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:16:55 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)


