» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆடி கிருத்திகை விழா: தூத்துக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - திரளான பெண்கள் வழிபாடு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:11:56 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் சேவை மற்றும் 108 திருவிளக்கு தீப பூஜை நடைபெற்றது. 

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை வார வழிபாட்டு மகளிர் சங்கத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்புத் திருவிளக்கு தீப பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டுச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 108 திருவிளக்கு தீப பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தீபமேற்றிப் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.



அம்பிகையின் ஊஞ்சல் சேவை மற்றும் தீப பூஜையில் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இச்சிறப்புப் பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவன் கோவில் பிரதான பட்டர் செல்வம் சிறப்பாகச் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory