» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பலி; மற்றொருவர் படுகாயம்!
சனி 18, ஜூலை 2026 10:29:05 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் முத்தமிழரசன் (18). அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவரது மகன் மாரிக்கண்ணன் (18). இவர்கள் இருவரும் தூத்துக்குடிதூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இன்று காலை பணிக்குச் செல்வதற்காக முத்தமிழரசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மாரிக்கண்ணன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முத்தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிக்கண்ணன் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முத்தமிழரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)


