» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)
சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ஓடும் அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பேருந்து மூலைக்கரைப்பட்டி அருகே வந்த போது, அதில் பயணம் செய்த 21 வயது இளம் பெண் ஒருவருக்குப் பேருந்து நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக நடத்துநரை எச்சரித்தார். தொடர்ந்து, பேருந்து மூலைக்கரைப்பட்டியில் வந்து நின்ற போது, அங்கேயே இறங்கிய அப்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இச்சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமி (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அண்ணாமலையின் இயக்கம் தேர்தலுக்குத் தயார் : தூத்துக்குடியில் கரு நாகராஜன் பேட்டி!
சனி 27, ஜூன் 2026 10:09:23 AM (IST)

தமிழக மக்களுக்கு தவெக அரசு செய்யும் துரோகம் : நயினார் நாகேந்திரன் சாடல்!
சனி 27, ஜூன் 2026 8:07:35 AM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)


