» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்! – அரசு விழாக்களில் பெரும் சர்ச்சை!
வியாழன் 4, ஜூன் 2026 3:53:39 PM (IST)

சென்னையில் நடைபெற்ற அரசு விழாக்களில், குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பாக மேயர் பிரியா மற்றும் தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நேரிடையான மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடத்தை முறைப்படி திறந்து வைத்து விழாக் குத்துவிளக்கினை ஏற்றினார்.
விளக்கேற்றி முடித்தவுடன், மரபுப்படி தனக்கு அருகில் நின்றிருந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல், அவரைத் தாண்டி அடுத்ததாக நின்றிருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் மேயர் பிரியா அதனை நேரடியாக வழங்கியுள்ளார்.
மெழுகுவர்த்தியை வாங்குவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி கையை நீட்டி முற்பட்டபோதும், மேயர் அதனைப் பொருட்படுத்தாமல் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மேடையில் பகிரங்கமாகத் தனக்கு நேர்ந்த அவமதிப்பால் கடும் அதிருப்தியடைந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, விழா நிறைவடையும் முன்பே நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக வெளியேறினார்.
நம்மாழ்வார்பேட்டையில் இரண்டாவது மோதல்:
இந்த முதல் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப்பள்ளியில் மற்றொரு அரசு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகிய இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர்.
முந்தைய கசப்பான சம்பவத்தைச் சரிசெய்யும் நோக்கில், இம்முறை மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு, கையில் இருந்த மெழுகுவர்த்தியைச் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியிடம் நேரடியாக நீட்டினார். ஆனால், புளியந்தோப்பு பள்ளியில் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பைக் மனதில் வைத்து ஆத்திரத்திலிருந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, மேயர் பிரியா கொடுத்த மெழுகுவர்த்தியை வாங்க அடியோடு மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மேயர் தரப்பில் அவரை மீண்டும் குத்துவிளக்கேற்ற வருமாறு வற்புறுத்தி அழைத்தபோதும், அவர் தனது முடிவில் தீர்க்கமாக இருந்து அதனைத் திட்டவட்டமாக நிராகரித்தார்.
பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இருவேறு அரசுப் பள்ளி மேடைகளில் அரங்கேறிய இந்த மெழுகுவர்த்தி விவகாரம், தற்போது சென்னை மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தவெக - திமுக இடையே நிலவும் உள்ளூர் அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டுப் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" நயினார் நாகேந்திரன் பேட்டி
வெள்ளி 5, ஜூன் 2026 4:47:36 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி : புதிய அரசியல்... புதிய பாதை! – அண்ணாமலை அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 3:47:51 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சிபிஎம் கண்டனம்! – புதிய கூட்டணி விவகாரத்தில் அரசியல் மோதல்
வெள்ளி 5, ஜூன் 2026 12:00:45 PM (IST)

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் : கட்சித் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:09:38 AM (IST)


