» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு நியமனம்

வெள்ளி 5, ஜூன் 2026 8:45:07 AM (IST)

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசும், மதுரை போலீஸ் கமிஷனராக கபில்குமார் சரத்கரும் பதவியேற்கிறார்கள். 

இதற்கான அரசு உத்தரவு விவரம் வருமாறு:-

1. பண்டி கங்காதர் - சென்னை கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

2. திஷா மிட்டல் - சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், சென்னை மேற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பொறுப்பேற்பார்.

3. பகலவன் - காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பதவியேற்பார்.

4. கபில்குமார் சரத்கர் - தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் இவர், மதுரை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார்.

5. அபிஷேக் தீட்சித் - மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. லோகநாதன் - காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர், சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளர்.

7. திருநாவுக்கரசு - காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்பார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory