» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வாட்டும் வெயில்: பசுமைப்பந்தல் அமைக்க ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:05:06 PM (IST)
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி முக்கியச் சந்திப்புகளில் பசுமைப்பந்தல் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர். முருகன், மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள போக்குவரத்துச் சிக்னல் சந்திப்புகளில், கோடை காலங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பசுமைப்பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வரும் மே மாதம் 4-ஆம் தேதி முதல் 'அக்னி நட்சத்திரம்' (கத்திரி வெயில்) தொடங்க உள்ளது. சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மாநகரின் முக்கியப் போக்குவரத்துச் சந்திப்புகளில் நிழல் தரும் பசுமைப்பந்தல்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என வாகன ஓட்டிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை: வேல்முருகன் கோரிக்கை
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:20:15 AM (IST)

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே உக்கிரமாகும்..!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:14:35 AM (IST)

மூதாட்டி மீது மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு: தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:08:16 AM (IST)

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு : கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது சோகம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:46:46 AM (IST)

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:20:15 PM (IST)



BabuApr 27, 2026 - 09:33:39 AM | Posted IP 104.2*****