» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 24, மார்ச் 2026 12:38:45 PM (IST)
வாகன விபத்தில் இறந்த டெக்னீசியன் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது அப்பாஸ் தஸ்தகீர் (35) என்பவர் பழையகாயல் சிர்கோனியம் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 17.02.2022 அன்று அதிகாலை ஆத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பொட்டல்காடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிராக வந்த வேன் மோதி படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
அவரது இறப்பு குறித்து அவரது மனைவி தமீமா ரோஷன், அவரது பிள்ளைகள் முஹம்மது பைசல், அர்ஷத் அஹமது மற்றும் அவரது தகப்பனார் செய்யது அப்பாஸ் புகாரி தாயார் சித்தி பாத்திமா ஆகியோர்கள் மேற்படி வாகனத்தின் உரிமையாளர் மற்றும் காப்பீட்டுக்கழகமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மீதும் ரூ.2கோடி நஷ்டஈடு கேட்டு கோரி தூத்துக்குடி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.ரவீந்திரன் மூலமாக வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரீத்தா இறந்து போனவர் குடும்பத்தினருக்கு வேனின் காப்பீட்டுக்கழகமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ரூ.1,57,72,816-ம் அதற்கு மனு தேதி முதல் 7.5% வட்டியும் செலவு தொகையோடு சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கில் வி. ரவீந்திரன் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!
செவ்வாய் 24, மார்ச் 2026 12:48:06 PM (IST)

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் பிளவு: தனித்துப் போட்டியிட திருமாவளவன் முடிவு
செவ்வாய் 24, மார்ச் 2026 10:52:06 AM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : அமைச்சர் ரகுபதி அறிக்கை
செவ்வாய் 24, மார்ச் 2026 8:24:38 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 5:18:11 PM (IST)

தமிழகத்தில் ‘துரந்தர் 2’ படத்தைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
திங்கள் 23, மார்ச் 2026 5:04:07 PM (IST)

