» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் வென்றாக வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

திங்கள் 23, மார்ச் 2026 10:49:13 AM (IST)



தற்போது தமிழகத்தில் நடைபெறவிருப்பது ஒரு போர். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அதில் நாம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

மறைந்த மாபெரும் பொதுவுடைமைத் தலைவர் ஆர். நல்லகண்ணு படத்திறப்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றி பேசுகையில், "ஐயா நல்லகண்ணு அவர்களின் எளிமை, நேர்மை மற்றும் சமரசமற்ற போராட்ட குணம் ஆகியவை இன்றைய இளைஞர்களுக்கும், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் ஒரு பாடமாகும். தகைசால் தமிழர் விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாயை அரசுக்கே திருப்பி அளித்த மாபெரும் மனிதர் அவர். அவரின் கொள்கைப்பிடிப்பை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் நடைபெறவிருப்பது பாசிசத்திற்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான ஒரு போர். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க இந்தத் தேர்தலில் நாம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ் மொழியைக் காக்கவும், வரும் தேர்தலில் தூத்துக்குடி உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் நமது கூட்டணி மகத்தான வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைச் செயற்குழு உறுப்பினர் முரளிதரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் ஏற்புரை வழங்கினார். விழாவில் நல்லகண்ணு குடும்பத்தினர், முன்னாள் எம்.எல்.ஏ டேனியல் ராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, சமக, தவாக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory