» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: நீதிமன்றம் அறிவிப்பு

செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், ஒன்பது போலீசாருக்கு எதிரான தீர்ப்பு வரும் மார்ச் 23-ஆம் தேதி வழங்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வந்தது. வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்தபோது பால்துரை என்ற சார்பு ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துகுமரன் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory