» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்
திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறைப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளிலிருந்து, 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27,783 பேரும், சிறைக்கைதிகளாக 281 பேரும் தேர்வு எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.மார்ச் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலத் தேர்வும், அதனைத் தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான தேர்வுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறும். தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 44,624 ஆசிரியர்களும், பறக்கும் படையில் (கண்காணிப்புப் படை) 4,540 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பதிலாகத் தேர்வை எழுத (Scribes), 7,465 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வினை எதிர்கொள்ள மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

தமிழகம் வளர்ச்சியில்லை, வீழ்ச்சியில்தான் உள்ளது: திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் சாடல்
திங்கள் 2, மார்ச் 2026 5:34:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் சுகுமார் மனுக்களைப் பெற்றார்
திங்கள் 2, மார்ச் 2026 5:25:10 PM (IST)

விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைப்பதா? கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, மார்ச் 2026 12:30:21 PM (IST)

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
திங்கள் 2, மார்ச் 2026 8:24:46 AM (IST)

தேவர் நினைவு மண்டபம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு : நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஞாயிறு 1, மார்ச் 2026 1:47:59 PM (IST)

