» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)
கடையநல்லூர் காவல் நிலையம் அருகிலேயே பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செல்வவிளை 3-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மனைவி மாரியம்மாள் (50). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கடையநல்லூர் காவல் நிலையம் முன்பாகச் சாலையோரம் அவர் நடந்து சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர் திடீரென மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார்.
திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் "திருடன்... திருடன்..." என்று சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர், அந்த நபரை அங்கிருந்த கடையநல்லூர் போலீஸ் நிலையத்திலேயே ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் கடையநல்லூர் வானவர் தெருவைச் சேர்ந்த சேக் மைதீன் மகன் அருமன் சாலிஹ் (30) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிச்சலான நகை பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே தாக்குதல்: காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்!
புதன் 18, பிப்ரவரி 2026 3:41:47 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)

