» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கைத் தமிழரை சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:32:31 AM (IST)
இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதக் கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 1983-ம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி, மருத்துவ வசதிகளை தமிழகம் தொடர்ந்து வழங்கி வருகிறது.தமிழகத்தில் தற்போது 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள். அதிலும் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.
‘ஆக்கப்பூர்வ அணுகுமுறை’ - இந்த நிலையில், சமீபத்திய மத்திய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாககுடிவரவு மற்றும் வெளிநாட்டினர் ஆணை 2025 ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. அந்த ஆணைப்படி, ‘2015 ஜன.9-ம் தேதி வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத்தமிழர்களை சட்ட விரோதமாககுடியேறியவர்களாக கருதக்கூடாது’ என்று முறையான விளக்கம் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும்.
எனவே, இலங்கைத் தமிழர்களிடன் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை மத்திய அரசு ரத்து செய்து, தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு தற்போதைய நடைமுறையில் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும். குடியுரிமை, நீண்டகால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம்வழங்க வேண்டும்.
இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையை சட்டவிரோதம் என வரையறுப்பது மனிதாபிமான சூழலை பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக, 2015 ஜன.9 வரைஇந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதக் கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும். இந்த கருத்துகளை விரைவாக, மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

