» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 600பேர் கைது
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:35:56 PM (IST)

முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
2021 தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், அமைப்பாளருக்கு ₹5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ₹3 லட்சமும் பணிக் கொடையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 20 முதல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தூத்துக்குடியில் இன்று சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அரசு ஊழியர்கள் சங்கம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்த செல்வம், அன்னம்மாள், வேல்முருகன், இணைச் செயலாளர்கள் பாஸ்கர், பிளாரன்ஸ் முத்துமணி, மோகனா, விஜயராணி, பொன்னரசி, செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் பேரணியாக புறப்பட்டு பாளையங்கோட்டை ரோடு அம்பேத்கர் சிலை அருகில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி 600-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியல் காரணமாக தூத்துக்குடி - பாளையங்கோட்டை பிரதான சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:25:01 PM (IST)

தமிழக அரசு மீது 13 குற்றச்சாட்டுகள்: வெளிநடப்பு செய்தது குறித்த ஆளுநர் விளக்கம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:12:17 PM (IST)

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : யாகசாலை பூஜைகள் நாளை துவக்கம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:08 AM (IST)

